Penbugs
CinemaEditorial News

சென்னை தீவுத்திடலில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை தீவுத்திடலில் வரும் 18ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி நிகழ்சி நடைபெற இருப்பதால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் பின்வருமாறு

சென்னை தீவுத்திடலில் வரும் 18ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி நிகழ்சி நடைபெற இருக்கிறது.

இதில் சுமார் 15000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை முத்துசாமி பாலம், மன்றோ சிலை வழியாக அண்ணாசாலைக்கு செல்பவர்கள் மற்றும் காமராஜர் சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக அண்ணாசாலை மற்றும் ஈவிஆர் சாலை செல்பவர்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  1. காமராஜர் சாலையில் இருந்து அண்ணா சாலை மற்றும் ஈவிஆர் சாலை செல்பவர்கள், உழைப்பாளர் சிலை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி வாலாஜா சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையலாம்.
  2. இராஜாஜி சாலை, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், ஆர்பிஐ சுரங்கப்பாதை வழியாக செல்லாமல், வடக்கு கோட்டை பக்க சாலை, முத்து சாமி சாலை, ஈவிஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
  3. ஈவிஆர் சாலையில் இருந்து போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், முத்துசாமி சாலைக்கு செல்லாமல், எம்எம்சி பாயிண்டில் வலது புறம் திரும்பி பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
  4. அண்ணாசாலையில் இருந்து முத்துசாமி பாலம் வழியாக இராஜாஜி சாலை செல்பவர்கள் பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, முத்து சாமி சாலை வழியாக இராஜாஜி சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment