Editorial News

சென்னையில் இரண்டு மேம்பாலங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடி செலவில் கட்டப்பட்ட 2 மேம்பாலங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

தென் மாவட்டங்களில் இருந்து பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன அதுவும் பண்டிகை நாட்களில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர்.

இதனை தவிர்க்க
வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே 55 கோடி மதிப்பில் உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016 செப்டம்பரில் தொடங்கியது.

ஆறு வழிப்பாதையுடன் 711 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் பணிகள் அண்மையில் முடிந்தன.

இந்நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்த வைத்தார்.

மேலும், பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 82 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையும், முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

Related posts

Bigg Boss Tamil 4, Day 75, Written Updates

Lakshmi Muthiah

மூத்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார்

Kesavan Madumathy

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

Penbugs

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் விபத்து, தப்பித்த சந்திரபாபு நாயுடு

Penbugs

Pakistan admits that Dawood Ibrahim is in Karachi

Penbugs

Azharuddin meets with an accident

Penbugs

58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மோடி

Penbugs

Woman dragged from railway station, gangraped by three men

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Penbugs

Mumbai on hold due to major power failure

Penbugs

Leave a Comment