Editorial News

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31 வரை நீடிப்பு – மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என்றும், அந்த நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளில் தொடர்ச்சியாக சரிவு காணப்பட்டாலும் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனாவை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related posts

Kids recovered under Operation Smile witness India Test in Chepauk

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

Kesavan Madumathy

போலீசாருக்கு பிறந்த நாளன்று விடுமுறை : சென்னை காவல்துறை ஆணையர் அசத்தல்

Penbugs

The ever run-hungry Devdutt Padikkal

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

Paris City Hall fined for having too many women in top jobs

Penbugs

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

21YO Arya Rajendran set to become youngest Mayor in India

Penbugs

REPORTS: Ishant Sharma suffers back injury, likely to miss a few matches

Penbugs

போர்க் கப்பல் குழுக்களில் முதன்முறையாக இணைந்த பெண்கள்

Penbugs

Leave a Comment