Editorial News

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31 வரை நீடிப்பு – மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என்றும், அந்த நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளில் தொடர்ச்சியாக சரிவு காணப்பட்டாலும் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனாவை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related posts

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy

Emmy Awards 2020- Full list of winners

Penbugs

In Pictures: Bayern Munich wins champions league title

Penbugs

Breaking: YouTube experiences technical problem and is globally down

Penbugs

Bangalore Literature Festival to be held on December 12-13

Penbugs

Dr BR Ambedkar statue design unveiled

Penbugs

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஸ்

Penbugs

Bigg Boss Tamil 4, Day 70, Double Eviction, Written Updates

Lakshmi Muthiah

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Penbugs

IPL 2020, Match 1, MI v CSK – Du Plessis, Rayudu take CSK home

Penbugs

Bengal: Manoj Tiwary joins TMC ahead of elections

Penbugs

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக…!

Kesavan Madumathy

Leave a Comment