Coronavirus

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் விஐபி பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்னை தலைமை பெண் காவலருக்கு இரண்டாம் கட்டபரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவர், முதல்வர் வீட்டில் பணியில் தற்போது ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் மோடி

Penbugs

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் – மத்திய அரசு..!

Kesavan Madumathy

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

COVID19: Trails for Russia’s vaccine to begin in India in few days

Penbugs

இ‌பாஸ் தளர்வால் சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

Penbugs

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

Kesavan Madumathy

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

Penbugs

SP Balasubrahmanyam tested positive for coronavirus

Penbugs