போருக்கு போறப்போ நாட்டின்
ராஜாவுக்கு தன்னோட தளபதி
துணை இல்லேன்னா அந்த போரின்
வியூகத்தில் குழப்பம் ஏற்பட்டு போரில்
தடுமாறி தோல்வி அடையும் நிலைக்கு
சென்றிடுவார்,போரில் அதிக
வெற்றிகளை பெற்று தந்த அந்த
மக்களால் விரும்பப்படும் ராஜா
போரில் தோல்வி அடையும் போது
நாட்டு மக்கள் கண் கலங்கி நிற்பர்,
போரில் கலந்து கொள்ளாத தளபதி
மீது பல விதமான விமர்சனங்கள்
வைக்கப்படுகிறது,
அடுத்த சிறிது நாளில் மீண்டும்
போர் வருகிறது,இம்முறை
ராஜாவுடன் பக்க பலமாக தளபதி
களத்தில் இறங்கி வியூகங்களை
வகுக்கிறார்,எதிரிகளை தன்
வியூகத்தால் தளபதி சிதறடிப்பாரா
என்று ராஜாவும் நாட்டு மக்களும்
எதிர்பார்த்து காத்திருந்தனர்,
தளபதி முன்னிலையில் போர்
தொடங்குகிறது ராஜாவின்
தலைமையில்,தளபதி தன்
கையில் இருக்கும் வாளின் சுழற்சியில்
எதிரணியின் தலைகளை குருதி படிந்த
போர் மண்ணில் முத்தமிட செய்கிறார்,
தளபதி மீண்டும் வருகை தந்ததும்
இல்லாமல் தன் வெற்றி வியூகத்தை
காட்டி சம்பவம் செய்ததில்
ராஜாவிற்கும் நாட்டு மக்களுக்கும்
பெரும் மகிழ்ச்சி,தளபதியை நேசிக்கும்
மக்கள் கண்களில் ஆர்ப்பரிக்கிறது
ஆனந்த பெருமழை,
சின்ன தல ரெய்னா தான் வராரு
சிஎஸ்கேவுக்கு விடியல் தர போறாரு
அது தான் அது தான் மக்களோட முடிவு,
ரெய்னா – மக்கள் விரும்பும் சின்ன தல..!!!

Lisa Sthalekar critics Geoffrey Boycott’s comments on commentary