தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகை குஷ்பு, தி.மு.கவிலிருந்து விலகி 2016-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக நடிகை குஷ்பு அறிவிப்பு
காங்கிரசில் இருந்து விலகுவதாக இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு நடிகை குஷ்பு கடிதம்
2014 தேர்தலில் தோற்று பின்னடைவில் இருந்த போது காங்கிரசில் என்னை இணைத்துக் கொண்டேன் – குஷ்பு
பதவி, பணம், புகழ் போன்ற காரணங்களுக்காக நான் காங்கிரசில் இணையவில்லை – குஷ்பு
காங்., மேலிடத்தில் இருக்கும் சிலருக்கு மக்களுடன், தொண்டர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் உள்ளனர் – குஷ்பு
காங்கிரசுக்காக உண்மையாக உழைக்கும் என்னைப் போன்றவர்களை மேலிடத்தில் சிலர் ஒடுக்க நினைக்கிறார்கள் – குஷ்பு
நீண்ட காலமாக யோசித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஷ்பு, சோனியாவுக்கு கடிதம்
காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு அளித்த சோனியா, ராகுல் காந்திக்கு குஷ்பு நன்றி
காங்., செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு