Coronavirus

கொரோனா பரவல் அதிகமாவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related posts

Ministers Back In Offices From Monday As PM Alters Lockdown Tactic: Sources

Penbugs

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Lockdown 4.0: Sports complexes, stadia to be opened | New Guidelines

Penbugs

Sandeep Lamichchane becomes 4th Nepal player to test positive for Covid-19

Penbugs

TN Govt announces Rs 1000 relief for 13 lakh differently abled in the state

Penbugs

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அமர்நாத் யாத்திரை 2020 ரத்து…!

Penbugs

கொரோனா மற்றும் பிரபலங்கள் மரணம் குறித்து சிம்பு

Penbugs

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று….!

Kesavan Madumathy

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs

TN under-reports Covid19 death in Chennai

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs

Leave a Comment