Coronavirus Editorial News

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ராயபுரத்தில் உள்ள காப்பகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். அங்கு 55 சிறுவர்கள் தங்கி இருந்த நிலையில் அதில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க சிறப்பு ஒருங்கிணைப்பாளரை தமிழக அரசு நியமித்துள்ளது.அதன்படி, நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில், தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Related posts

Sophie Gregoire-Trudeau tested positive for Corona

Penbugs

Man arrested for pregnant elephant’s death in Kerala

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

I’m still young, never thought of retiring: Jhulan Goswami

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக உயர்வு

Kesavan Madumathy

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

Penbugs

தமிழகத்தில் இன்று 4024 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sam Curran in self-isolation after reporting ‘sickness and diarrhoea’

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,629 ஆக உயர்வு

Penbugs

தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy