Coronavirus

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து, இதுவரை முடிவு செய்யவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்பீட் பிரேக் போடுவது போல, நோய் பரவலை தடுக்கவே முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் புதிதாக தொடங்கப்பட உள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 54 சதவீதமாக உள்ளது என்றார். கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா தொற்று என்பது புதிரான, புதிய நோய் என்றும், அது எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில், 527 முகாம்கள் மூலம், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லாமல், இங்கேயே இருந்தால்தான் பரிசோதனை செய்ய முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Related posts

தமிழகத்தில் இன்று 6227 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

Kesavan Madumathy

Tiktok ban song, ‘Chellamma’ from Doctor is out!

Penbugs

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

List of containment zones declared by GCC

Penbugs

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

Kesavan Madumathy

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy