Coronavirus

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ள ஹுண்டாய் கார் நிறுவனத்தில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 16 ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு ஒரிரு தினங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அங்குள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சோதனை செய்யுமாறு ஊழியர் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதைப் போன்று அரியானா மாநிலம் மனேசரில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலையில் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதாகவும், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாக வாய்ப்புள்ளதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா காலகட்டத்தில் தொழிற்சாலைகளை திறந்தால் தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் தொழிலாளர்களிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2115 பேர் பாதிப்பு …!

Penbugs

ஊரடங்கு காலத்தில் 1,150 டன் மருத்துவப் பொருள்களை கொண்டு சென்ற ரயில்வே

Penbugs

Heartwarming video: Residents welcomes COVID19 doc with thunderous applause

Penbugs

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy

Lockdown: Woman gangraped in a school at Rajasthan

Penbugs

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

Kesavan Madumathy

Ben Stokes dethrones Jason Holder as top-ranked Test all-rounder

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

ஆரோக்கிய சேது பயனாளிகள் 10 கோடியாக உயர்வு!

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

Kesavan Madumathy

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளுடன் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

Penbugs

World No. 2 Simona Halep to skip US Open

Penbugs