Coronavirus

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 50சதவீத பணியாளர்களுடன் வரும் 13 ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது .

ஆனால் தற்போதைய ஊரடங்கு நடைமுறைப்படி பணி செய்வதில் சிரமம் இருப்பதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்ததன் பேரில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 90% பணியாளர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பொது போக்குவரத்து வசதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முடிந்தவரை பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய ஊக்குவிக்குமாறும், பணியாளர்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

US president Donald Trump and First Lady Melania Trump tested positive for coronavirus

Penbugs

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

Karthik Dial Seytha Yenn- Nostalgic ride that we all needed to get through lockdown

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Despite price increase, Kamalathal continues sell Idli at Re 1 per piece

Penbugs

தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Leave a Comment