Coronavirus

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து, அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல தெலுங்கு பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சல் தானாகவே குணமடைந்தாலும், நாங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அந்த சோதனை முடிவில் எங்களுக்கு லேசான அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்படி, நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், ‘எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நலமாக உள்ளோம். ஆனால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். அப்போதுதான் ப்ளாஸ்மா செல்களை தானம் செய்ய முடியும்’என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று 6031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வற்ற முழு ஊரடங்கு

Penbugs

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2376 ஆக உயர்வு

Penbugs

Leave a Comment