கர்நாடகாவில் தலைநகர் பெங்களூரு உள்பட அனைத்து இடத்திலும் நாளை முதல், முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பேசிய அவர், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வாகாக அமையாது என்று அவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்பதால், மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவது அவசியமானது என்று குறிப்பிட்டார்.
நிலையான பொருளாதாரத்தை பராமரித்தபடி கொரோனாவுக்கு எதிராக போராட இருப்பதகா அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது என்றும் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.