இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மராட்டிய தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் மேலும் 811 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7628 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.