Coronavirus

மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளாதீர்கள் – சுகாதாரத்துறை

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை, பொது மக்களுக்கு தகுந்த மருந்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் குறித்தும், சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளின் இருப்பு, பயன்படுத்தும் முறை பற்றி பல தவறான தகவல்கள் பரப்பபட்டு வருகின்றன. மக்களும் பல்வேறு நகரங்களில் தாங்களாகவே ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு பாதிப்புக்கு ஆளானதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் டுவிட்டரில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய மருந்து, இதனை மருத்துவர் பரிந்துரையின்றி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இம்மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட பிற நோயாளிகள், கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த வீட்டு உறுப்பினர்களுக்காக போதுமான அளவு ஹைட்ராக்சி குளோரோகுயின் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இம்மருந்து அவர்களுக்கானது மட்டும் தான். பிற பொது மக்களுக்கு தேவையில்லை. மருத்துவர் பரிந்துரையின்றி சுயமாக இம்மருந்தை எடுத்துக்கொண்டால் மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளது.

Related posts

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

COVID19: SP Balasubrahmanyam critical, on life support

Penbugs

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

Chennai police file FIR on Varadharajan for spreading ‘false news’

Penbugs

Chetan Sakariya’s father dies of COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

Tamannah Bhatia tested positive for COVID 19, admitted to private hospital in Hyderabad

Penbugs

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

Actress Namitha takes care of stray dogs during Coronavirus pandemic

Penbugs