Coronavirus

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடியை நல்லவா் என்று கூறிய பெண்ணுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவா் கூறிய சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ராஜஸ்தானின் சித்தூா்கா் மாவட்டத்தில் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர சிங் பிதூரி பங்கேற்று பொருள்களை வழங்கினாா்.

அப்போது, பொதுமக்களை நோக்கி மோடி நல்லவரா அல்லது மாநில முதல்வா் அசோக் கெலாட் நல்லவரா? என்று ராஜேந்திர சிங் கேள்வி எழுப்பினாா்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெண், ‘மோடிதான் நல்லவா்’ என்று பதிலளித்தாா்.

இதையடுத்து, அவரை சுட்டிக்காட்டிப் பேசிய எம்எல்ஏ, ‘நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் மோடி என்று பதிலளித்துள்ளீா்கள். எனவே, நீங்கள் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றலாம்; உங்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது’ என்றாா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக, மாநில பாஜக தலைவா் சதீஸ் பூனியா, காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளாா். காங்கிரஸ் அரசு மக்களிடம் அரசியல்ரீதியாக பாரபட்சம் காட்டுவதற்கு இது சிறந்த உதாரணம் என்று அவா் கூறியுள்ளாா்.

Related posts

கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டண நிலவரம் …!

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்

Penbugs

COVID19: Teacher offers Quarantine hug to her students at her residence

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

Man travels 200km with his kid, wife home on stolen bike, returns it after reaching home

Penbugs

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

Anjali Raga Jammy

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs