Editorial News

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி, அம்மாநில முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த தமிழ் வழி மேல்நிலைப்பள்ளியை, திடீரென அம்மாநில அரசு மூடியது. மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அப்பள்ளி மூடப்பட்டதாக குஜராத் அரசு விளக்கமளித்தது.

இந்தநிலையில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், குஜராத் அரசின் முடிவால் தமிழ் மாணவர்கள் கல்வியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு தமிழ் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அப்பள்ளிக்கான பராமரிப்பு செலவுகளை ஏற்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டினை பெற்று வருகிறது.

Related posts

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

Kesavan Madumathy

Ramayan overtakes GOT to become world’s most watched show in recent times

Penbugs

Jacinda Ardern wins second term in landslide victory; set to return as NZ PM

Penbugs

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அமர்நாத் யாத்திரை 2020 ரத்து…!

Penbugs

PM Modi to share video message tomorrow

Penbugs

Kareena Kapoor-Saif Ali Khan expecting second child

Penbugs

Starbucks ban employees from wearing anything that supports BlackLivesMatter

Penbugs

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: காங்கிரஸ் அதிரடி

Penbugs

Corona updates: China reports zero new domestic cases for the first time

Gomesh Shanmugavelayutham

“Baby Shark” beats Despacito, becomes most-watched video on YouTube

Penbugs

Vijayalakshmi attempts suicide, admitted in hospital

Penbugs

இனி எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்!

Penbugs

Leave a Comment