Coronavirus

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

நொய்டா பகுதிகளில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் பொது இடங்களுக்கு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா பரவல் குறித்து அறிந்து கொள்வதற்கு, கொரோனா பாதிக்கப்பட்ட நபர், நாம் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது. அந்த ஆப்பை அனைவரையும் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைல் போனில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் பொது இடங்களுக்கு மக்கள் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் இருப்பது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்கள் கட்டாயம் ஆரோக்ய சேது ஆப்பை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்துவைத்திருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, ஆரோக்ய சேது ஆப்பில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்

Related posts

Domestic violence: Man hits wife with pin roller for ‘tasteless’ food!

Penbugs

கொரோனாவில் இருந்து குணமடைவது 70 சதவீதமாக உயர்வு

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

Priest beheads a man in Odisha claiming to put an end to Coronavirus

Penbugs

Women obviously don’t have same feet as the men, we need something different: Healy on lack of female-specific shoes

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

Atharvaa Murali tests Covid 19 positive

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs