உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொழிற்சாலையில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த மே 8 ஆம் தேதி தான் திறக்கப்பட்டது.
‘எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிற்சாலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. தற்போது 6 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பணியாளர்களின் நலன் கருதி ஆலை பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் 3,000 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது’ என்று நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Twitter introduces new ‘fleets’ feature in India