திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(69) சென்னையில் தனது வீட்டில் காலமானார்.
இவர் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் எனும் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான மம்மூட்டியின் சிபிஐ 5 படத்திலும் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார்.
அவரின் மறைவிற்கு திரைத்துறையினர் அஞ்சலி தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.