Coronavirus

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!


ஆந்திரா மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில், சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் கொண்ட பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலின் முக்கிய தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளியை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பொதுப்போக்குவரத்தை சமூக இடைவெளியுடன் நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. அதற்கு ஏற்றார்போல, ஆந்திர போக்குவரத்துக் கழகம் வழக்கமாக பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கையாக மாற்றியுள்ளது. இதன்மூலம் ஒரு நபருக்கும் இன்னொருவருக்கும் ஒரு மீட்டர் இடைவெளி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பயணிக்கக்கூடிய தொலைதூரப் பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து துவங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இதுபோன்ற ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், சகஜமான நிலை வந்த பிறகு இருக்கைகள் பழைய முறையைப்போல மாற்றவும் முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பேருந்துகள் முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

Tamannah Bhatia tested positive for COVID 19, admitted to private hospital in Hyderabad

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

TN under-reports Covid19 death in Chennai

Penbugs

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

COVID19: Meet Leo Akashraj, who works round the clock to help pregnant women with free transport

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,516 பேர் பாதிப்பு ….!

Penbugs

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

Asia Cup 2020 officially cancelled, confirms BCCI president Ganguly

Penbugs