Editorial News

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

சேலம் மாநகரில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மற்றும் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

புதிய சேவை திட்டத்தின் கீழ் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ஐந்து ரோட்டை மையப்பகுதியாக கொண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 7.87 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக மிக பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்காவில் முடியும் பாலம் 5.01 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பாலத்தின் ஒரு பகுதி, ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை மூன்று கிலோமிட்டர் தூரம் கொண்டது.

அந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜுன் 7-ம் தேதி திறந்துவைத்தார். குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான பாலம் கட்டும் பணி அனைத்தும் முடிவடைந்து விட்டதால் இன்று திறக்கப்படுகிறது.

பாலத்தின் இரு புறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டால் சேலம் 4ரோடு, ஐந்து ரோடு, ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும்.

5 ரோடு அருகே இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். பின்னர் பாலத்திலும் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

அதனைத்தொடர்ந்து, சேலம் லீ பஜார் பகுதியில் 46 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார்.

Related posts

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

இந்தியாவின் கடைசி முடிசூடிய மன்னர் ஓர் தமிழன்!

Penbugs

Chennai: Ignoring Corona scare, 5000 gather to protest against CAA

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

Taj Mahal’s tombs cleaned for 1st time in 300 years for Donald Trump

Penbugs

Mexico: Dozens of mammoths found under future airport

Penbugs

Major Suman Gawani to be honoured with UN Gender Advocate Award

Penbugs

Many WhatsApp number details available on normal Google search

Penbugs

Corona scare: Ronaldo quarantined after his Juventus teammate tested positive

Penbugs

Devendra Fadnavis sworn in as Maharashtra CM

Penbugs

டிக் டொக் உள்ளிட்ட மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Kesavan Madumathy

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 7 பேர் காயம்

Penbugs