Coronavirus

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வற்ற முழு ஊரடங்கு

தமிழ்நாடு முழுவதும், இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, நள்ளிரவு முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

அரசு வாகனங்கள் தவிர, பிற, அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு நாளான இன்று சென்னையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். அவசியமின்றி வெளியில் வருபவர்களை பிடித்து, அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றியதாக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

Amid lockdown extension, Migrant workers protest at Mumbai Bus stand

Penbugs

PM CARES fund does not come under RTI Act -Response to RTI filed by lawyer

Penbugs

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

Madras Crocodile Bank needs your help!

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

Emotional video: Health worker mom meets daughters after 2 months

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

இன்று தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

Leave a Comment