Editorial News

தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்கு தடை

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த சிலரும் போலீசாருடன் இணைந்து தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தடை விதித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை ஈடுபடுத்தக்கூடாது என்று காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related posts

Jamia Millia Islamia Protests: In Pictures

Penbugs

இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை

Penbugs

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Railways to offer massage services in 39 trains!

Penbugs

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs

Rugby Australia sacks Israel Folau over homophobic social media posts!

Penbugs

Free LPG, 1.7 Lakh crore relief fund and more: FM Nirmala Sitaraman speech

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

New Zealand declared Coronavirus free, all restrictions lifted

Penbugs

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாமக்கல் மாணவியை பாராட்டிய பிரதமர் மோடி

Penbugs

Leave a Comment