ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை இழந்தது. பின்னர் டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரில் களமிறங்கியது .
இதில் முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு போட்டி டிராவில்முடிந்தது.
நான்காவது டெஸ்ட் போட்டி இறுதி நாளான இன்று கில் ,புஜாரா ,ரிஷப் பன்ட் , வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை பெற்றது.
இதனையடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்றது. இத்தொடரின் தொடர் நாயகன் விருது பட் கம்மின்ஸ், போட்டியின் ஆட்ட நாயகன் விருது ரிஷப் பன்ட்-க்கும் வழங்கப்பட்டது.
32 வருடங்களுக்கு பிறகு பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியா இந்த தோல்வியை தழுவியுள்ளது.
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் பரிசினை பிசிசிஐ அறிவித்துள்ளது.