கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண நலம் அடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஒரு முறை கொரோனா தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு உடலில் வைரஸ் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இருக்கும் என்றும், அத்தகைய நபர்கள் நோய் பரப்பும் ஆபத்தற்றவர்கள் என சான்றிதழ் அளித்து பயணம் செய்வதற்கோ பணி புரிவதற்கோ அனுமதிக்கலாம் என சில நாடுகள் கருத்து தெரிவித்தன.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு, ‘இது போன்ற முடிவுகள் பொது சுகாதார விதி மீறல் என்பதோடு நோய் பரவல் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு முறை கொரோனா தாக்கி மீண்டவர்களை மீண்டும் வைரஸ் தாக்கலாம், இரண்டாவது முறை வைரஸ் தாக்காத வகையில் நோயிலிருந்து மீண்டவர்கள் உடம்பில் ஆன்டிபாடிகள் இருக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.