Coronavirus

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

நாடெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு குறித்து அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி பத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி மீண்டும் கேட்டறிந்தார்.

இதனையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், இன்று காலை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் ‌.

ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கை :

ரூ.3000 கோடி உடனடியாக தேவை .

தமிழகத்தில் பிசிஆர் டெஸ்டுக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய அரசு வழங்க வேண்டும்.

உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் .

நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55,637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் .

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் ‌.

ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தினால் மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி ஒதுக்க வேண்டும் .

தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1000 கோடியை உடனடியாக வழங்கவும் வேண்டுகோள்.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வ் வங்கியின் சிறப்பு திட்டத்தின் SIDBI ரூ.1000 கோடியை வழங்க உதவ வேண்டும் .

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

Penbugs

Make challenging wickets: Dravid on saliva ban

Penbugs

Vinesh Phogat tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

New Zealand ‘achieved elimination’, lockdown restrictions relaxed!

Penbugs

Saina Nehwal, Prannoy tested positive for COVID19

Penbugs

COVID19: Rakul Preet Singh to provide 2 meals a day for 200 families

Penbugs

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

COVID19: Akshay Kumar donates Rs 2 crore to Mumbai Police

Penbugs

Though I lead a healthy lifestyle, proper diet and exercise, coronavirus made me weak: Tamannah Bhatia

Penbugs

Leave a Comment