Coronavirus

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

நாடெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு குறித்து அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி பத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி மீண்டும் கேட்டறிந்தார்.

இதனையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், இன்று காலை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் ‌.

ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கை :

ரூ.3000 கோடி உடனடியாக தேவை .

தமிழகத்தில் பிசிஆர் டெஸ்டுக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய அரசு வழங்க வேண்டும்.

உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் .

நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55,637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் .

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் ‌.

ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தினால் மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி ஒதுக்க வேண்டும் .

தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1000 கோடியை உடனடியாக வழங்கவும் வேண்டுகோள்.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வ் வங்கியின் சிறப்பு திட்டத்தின் SIDBI ரூ.1000 கோடியை வழங்க உதவ வேண்டும் .

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர பொதுமுடக்கம்; ஞாயிற்றுக்கிழமை முழுப் பொதுமுடக்கம் அறிவிப்பு

Penbugs

After helping daily wagers, Salman Khan helps vertically challenged artistes

Penbugs

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: பிரகாஷ் ஜவடேகர்

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Penbugs

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

Dutee Chand distributes food packet in her village

Penbugs

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Leave a Comment