Coronavirus

கொரோனா நோய் பரவலை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த வாலிபர்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக வாலிபர் ஒருவர் தன்னுடைய நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப பணிகளில் சிலர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களில் ஒருவர் விவேக், இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த சனிக்கிழமை தனது சக நண்பர்களிடம் சந்தைக்கு சென்று வருவதாகக் கூறி அங்கிருக்கும் நாதேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.அங்கு அவர் நாக்கு அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக கோவில் பூசாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விவேக் தன்னுடைய நாக்கை அம்மனுக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டிக்கொண்டு இவ்வாறு அறுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Kesavan Madumathy

4.90 லட்சம் கிலோ மருத்துவ கழிவுகள் அகற்றி அழிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

தமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

BCCI issues IPL SOP guidelines to franchises

Penbugs

Arjun Kapoor tested positive for coronavirus

Penbugs