Editorial News

இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த ஆப்களை உருவாக்க புதிய திட்டம் – பிரதமர் மோடி

பயனாளர்களின் தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் இந்தியாவிற்கு வெளியே பகிரப்படுவதாக கிடைத்த தொடர் புகார்களை அடுத்து டிக்டாக், ஹலோ ஆப், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்ததாக மத்திய அரசு அறிவித்தது.

அதனையடுத்து, சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் எழுந்தது. இந்தப் பின்னணியில் தடைசெய்யப்பட்ட சீன ஆப்களான டிக்டாக்குக்கு மாற்றாக சிங்காரி ஆப்பும், ஹலோ ஆப்புக்கு மாற்றாக ஷேர்சேட் ஆப்பும் இந்திய பயனாளர்களைக் கவர்ந்துவருகிறது.

இந்த இரண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்களாகும். அதேபோல, மற்ற ஆப்புகளுக்கு மாற்றாகவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்களுக்கு வரவேற்புகள் கிடைத்துவருகின்றன. இந்தநிலையில், இந்தியாவில் ஆப்கள் தயாரிப்பதை ஊக்கும் விதமாக பிரதமர் மோடி புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த ஆப்களை உருவாக்கவேண்டும் என்று தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்துவருகிறது. அவர்களுடைய சிந்தனைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆத்மனிர்பார் பாரத் ஆப் உருவாக்கப் போட்டியை மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை தொடங்கிவைக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

Kesavan Madumathy

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிவிட்

Penbugs

Saravana Bhavan owner dies in the hospital while serving life term!

Penbugs

ISRO launches World’s lightest and India’s first student-made satellite!

Penbugs

நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு…!

Kesavan Madumathy

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

Penbugs

சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

நிபந்தனைகளுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி

Lakshmi Muthiah

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

Nithyanandha creates his own ‘country’, names it ‘Kailaasa’

Penbugs

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs