Editorial News

பூமி ஒன்று தான்…!

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA)என்பது ஒரு தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான பாதுகாப்புகளைப் பின்பற்றாமல் ஒப்புதல் அல்லது அழிக்கப்படுவதைத் தடுக்கிறது. ஒரு தொழிற்துறை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கத்தை இது ஆராய்ந்த, பின்னர் நிபுணர்களின் குழு அனுமதி வழங்குவதோ அல்லது மறுப்பதோ ஆகும்.

சமீபத்தில் மத்திய அரசு முன்மொழியப்பட்ட புதிய வரைவு EIA அறிவிப்பு 2006 EIA இலிருந்து ஒரு பிற்போக்குத்தனத்தையும் மற்றும் மக்களின் மெல் செலுத்தப்படும் ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வரைவின் நோக்கம் சுற்று சூழலுக்கு இணக்கமாக இருக்க வேண்டும், மாறாக அது தொழில் சார்பு மற்றும் மக்கள் விரோதமாக இருக்கிறது. இந்த அறிவிப்பு நாட்டில் அனுமதி பெறப்படுவதில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முதலாவதாக,

1.பரந்த அளவிலான திட்டங்களுக்கான பொது ஆலோசனையின் தேவையை அது நீக்குகிறது.

2.நீர்ப்பாசனம், தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல், கட்டிட நிர்மாணங்கள் போன்ற திட்டங்களை பொதுமக்கள் பங்களிப்பிலிருந்து விலக்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களின் குரலை அது பறிக்கிறது.

3.இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக பொதுமக்கள் பங்கேற்புக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் இது குறைக்கிறது.

4.தொழில்கள் ஆண்டுக்கு இரண்டு முறை இணக்க அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும், அது இப்போது வருடத்திற்கு ஒரு முறை குறைக்கப்பட்டுள்ளது.
இது தொழில்துறை சார்பு விதி என்பதை நிரூபிக்கிறது,
வரைவு அறிவிப்பின் முக்கிய சட்டத் துளைகளில் ஒன்று, தொழில்கள் அவற்றின் மீறல்களிலிருந்து பயனடைய அனுமதிக்கும் வெளிப்படையான உயிர்நாடி தான் இந்த வரைவு. இது முறையான அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களைப் பெறாத திட்டங்களை நியாயப்படுத்தும் பிந்தைய உண்மை அனுமதிகளை அனுமதிக்கிறது. இந்த கொள்கை சுற்றுச்சூழல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் இழிவுபடுத்துகிறது.

உதாரணமாக, அசாமில் கிழக்கின் அமேசான் என்று அழைக்கப்படும் டெஹிங் பட்காய் நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளாக நிலக்கரி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டவருகிறது , தமிழகத்தில் 8வழி சாலை சேலத்திலும் மற்றும் ஹைட்ரோகார்பன் எரிபொருள் எடுக்கும் ஒப்பந்தகள் நெடுவாசலிலும் ,கதிராமங்கலத்திலும் , இதேபோல் எண்ணற்ற காடுகளையும், மலைகளையும் தொழிற்துறை வளர்ச்சி என்ற பேரில் நம் சுற்றுச்சூழல் வளங்களை அழிக்க வள்ள ஆயுதமாக பயன்படுத்தப்படும்.

இது ஒரு தேசிய சட்டமாக இருந்தாலும், இது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டது, வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தில்லி உயர்நீதிமன்றம் வரைவின் நகல்களை பிற திட்டமிடப்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டது. எதையாவது புரிந்து கொள்ள முடியாவிட்டால் அவர்களுக்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முடியாது என்பதால் இது பிற மோழிவழி தேசிய சமூகங்களை பொது பங்கேற்பிலிருந்து தெளிவாக விலக்குகிறது.

இந்த புதிய வரைவு குறித்து இணைய வழியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டும்,அதில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்தும், அது ஏற்படுத்தவுள்ள சூழலியல் சீரழிவுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்த சர்வதேச சூழலியல் ஆர்வலராக அறியப்படும் கிரெட்டா துன்பெர்க் தொடங்கி வைத்த fridays for future என்ற இயக்கத்தின் இந்திய இணையதளமான fridaysforfuture.in. உள்ளிட்ட சில இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒலிக்கிற குரல்களை தேடிப்பிடித்து நசுக்கியுள்ளார்கள்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கத்தவறிவிட்டு புதிய நோய்கிருமிகளோடு
புதிய இயல்பு வாழ்க்கைக்கு தயாராகுங்கள் என்று சொல்வதற்கு நமக்கு அரசாங்கம் தேவையில்லை. எங்களது இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கான அரசாங்கம் தான் தேவைப்படுகிறது .அதற்கு இயற்க்கை வளங்களின் அவசியம் உணர்ந்த அரசாங்கம் தேவைப்படுகிறது.

மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்று அரசாங்கத்திற்கு நமது குரலை தெரியப்படுத்த நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மின்னஞ்சல் அனுப்ப வழி செய்துள்ளது.

Mail link: https://tinyurl.com/drafteiawithdrawal/‬

என்ற இணைப்பில் சென்று மின்னஞ்சல் அனுப்பித் தங்கள் கடமையாற்றவும்.
ஆகஸ்டு 11 வரை அனுப்பலாம்.

இது ஏதோ ஒரு கட்சியினர் எடுக்கிற முயற்சி என்று எண்ணாமல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த பூமியை காப்பாற்ற அனைவரும் இணைந்து இதைச் செய்வோம். சூழியல் பாதுகாப்பை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு-2020 ஐ திரும்ப பெற குரல் கொடுப்போம்.
நமக்கு நாடுகள் கட்சிகள் அமைப்புகள் பல இருக்கலாம் .ஆனால் பூமி ஒன்றுதான்.

Related posts

BJP lodges complaint over Oviya for a tweet

Penbugs

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs

Man orders laptop online, receives stone instead

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500; மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு

Penbugs

NASA is working with Tom Cruise to shoot a film in outer space

Penbugs

Therapy dog receives honorary doctorate in veterinary medicine

Penbugs

Tom Hanks and Rita Wilson tested positive for coronavirus

Penbugs

Recent: Chief Minister welcomes the first transgender nurse

Penbugs

Reddit co-founder Alexis quits board, wants to be replaced by black candidate

Penbugs

What caused the locust outbreak?

Penbugs

Jyotika donates Rs 25 Lakhs to Tanjavur medical hospital

Penbugs

Leave a Comment