Coronavirus Editorial News

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500; மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 செலுத்த வேண்டும் என, மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் தலைமையிலான காங்., குழு சிபாரிசு செய்துள்ளது.

கொரோனா பரவல் தொடர்பாக, கட்சியின் கருத்துகளை தெரிவிக்க, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் தலைமையில், 11 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, காங்கிரஸ் தலைவர், சோனியா அமைத்துள்ளார். இந்த குழுவில், ராகுல், சிதம்பரம், மணீஷ் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இக்குழுவின் முதல் கூட்டம் முடிந்த பின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேட்டி அளித்த அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கூட்டத்தில், நாட்டில் ஏராளமான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய, சிறு, குறு தொழில் நிறுவனங்களை, மீண்டும் புத்துயிரூட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதனை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்னை மற்றும் தானிய கொள்முதல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஏழைகளின் வங்கி கணக்கில், தலா ரூ.7,500 செலுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு குழு சிபாரிசு செய்துள்ளது. ஜன்தன் வங்கி கணக்கு, அனைத்து ஓய்வூதிய கணக்குகள், பிரதமர்-கிஷான் திட்ட கணக்குகளில் இப்பணத்தை செலுத்த வேண்டும். மக்கள் மீது அரசுக்கு கருணை இருந்தால், இதற்கு நிதி ஒதுக்கும். காங்., குழு அளிக்கும் சிபாரிசுகளை அரசு ஏற்கும் என நம்புகிறோம்’ இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

Recent: Chief Minister welcomes the first transgender nurse

Penbugs

Sonia Gandhi becomes interim Congress Party President

Penbugs

சென்னையில் இன்று மின்தடை

Penbugs

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

தெலங்கானா மருத்துவர்களுக்கு ஊக்கமளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

Kesavan Madumathy

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

Penbugs

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs

Jayalalithaa favoured Ram temple but also desired mosque in Ayodhya: TN CM

Penbugs

கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தர தயார் – கேப்டன் விஜயகாந்த் ..!

Penbugs

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs