Editorial News

2021 தேர்தலில் ஆண்களை விட 5.7 லட்சம் பெண்கள் வாக்களித்தனர்

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முடிந்த சட்ட மன்ற தேர்தலில் ஆண்களை விட மொத்தம் 5,68,580 பேர் கூடுதலாக பெண்கள் வாக்களித்துள்ளனர்.

இது தமிழக சட்டமன்றத் தேர்தலின் வரலாற்றில் மிகப் பெரிய அதிகரிப்பு என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்களித்த மொத்த 4,57,76,311 பேரில், 2,31,71,736 பெண்கள், 2,26,03,156 ஆண்கள், 1,419 பேர் மற்றவர்களும் வாக்களித்துள்ளனர்.

2016 தேர்தலில் தமிழ்நாட்டில் முதன்முறையாக வாக்களித்த பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட முந்தியது. அப்போது ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி 3.7 லட்சமாக இருந்தது.

இது 2019 மக்களவைத் தேர்தலிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருந்தது.

இது 2021 ஆம் ஆண்டில் 5.7 லட்சமாக அதிகரித்தது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட எண்ணிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு முந்தைய எண்ணிக்கையான 72.78% இலிருந்து 72.81% ஆக உயர்ந்தது.

பெண்கள் வாக்காளர்கள் முழுமையான எண்ணிக்கையில் கணிசமாக அதிகமாக இருந்தபோதிலும், பெண்களிடையே (72.55%) வாக்குப்பதிவு சதவீதம் ஆண்களை விட (73.09%) மிகக் குறைவு.

தமிழகத்தில் பெண்கள் 162 தொகுதிகளில் ஆண்களை விட அதிகமாக உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பட்டூரில் பரந்த இடைவெளி இருந்தது, அங்கு ஆண்களை விட அதிகமாக 17,395 பெண்கள் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை வித்தியாசம் 16,031.

ஆண்கள் பெண்களை விட அதிகமாக இருந்த சேலம் மாவட்டம் ஓமலூர் அங்கு மொத்தம் 11,373 ஆண்கள் இங்கு வாக்களித்தனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால் அது ஒரு கட்சி சார்பாக முடிவுகள் வர வாய்ப்பு வழி வகுக்கும் என்பதை ஏற்று கொள்ள முடியாது இரு கட்சிகளுக்கும் ஓட்டு பகிர்வு சம அளவிலயே இருப்பதாக தெரிவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

Joe Biden wins US Presidential elections

Penbugs

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு

Kesavan Madumathy

ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மகால் மீண்டும் திறப்பு

Penbugs

MS Dhoni was a special man in the run chase: Michael Holding

Penbugs

PUBG mobile, PUBG mobile lite likely to stop working in India from today

Penbugs

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் விபத்து, தப்பித்த சந்திரபாபு நாயுடு

Penbugs

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

Kesavan Madumathy

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

Penbugs

Meerut woman who ran away from home to avoid marriage returns as PCS officer after years

Penbugs

Bigg Boss Tamil 4, Day 51, Written Updates

Lakshmi Muthiah

Mumbai on hold due to major power failure

Penbugs

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிப்பு

Penbugs

Leave a Comment