Coronavirus

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியை சேர்ந்தவர் பாலக்கோரூ மங்கம்மா.

101 வயதான இந்த மூதாட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் குணமடைந்த அவர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை இயக்குனர் வெங்கம்மா, கண்காணிப்பாளர் ராம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மங்கம்மாவின் குடும்பத்தினர்கள் நன்றி தெரிவித்தனர்.

அப்போது மருத்துவர் ராம் பேசுகையில், `உலகமே கொரோனா வைரஸ் கண்டு அச்சமடைந்து வரக்கூடிய நிலையில் 101 வயது மூதாட்டி மங்கம்மா தைரியத்துடன் கொரோனா வைரசை எதிர்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

அவரது மன தைரியம் அவரை தற்போது பூரண குணத்துடன் வீடு செல்வதற்கு உதவியாக இருந்தது. எனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த காரணத்தை கொண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவிலிருந்து முழு குணம் அடையலாம் என்பதற்கு மங்கம்மா ஒரு உதாரணம்’’ என்றார்.

Related posts

தந்தை உடல் தகனம்: வீட்டிலிருந்தே இறுதி மரியாதை செலுத்திய யோகி ஆதித்யநாத்

Kesavan Madumathy

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

Sachin Tendulkar donates Rs 1 crore to Mission Oxygen

Penbugs

COVID19: India’s recovery rate reaches 90 per cent

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்

Kesavan Madumathy

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

Leave a Comment