Penbugs
Editorial NewsPolitics

கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை கத்திப்பாரா பாலத்திற்கு கீழ் காலியாக இருந்த இடத்தில் 14.50 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சதுக்கத்தில் பேருந்து நிலையம், சிறுவர் பூங்கா, உணவகம், வணிக வளாகம் போன்றவை உள்ளன.

இந்த சதுக்கத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சதுக்கம் நவீன சென்னையின் அடையாளத்தையும், கலாச்சாரப் பெருமையையும் பிரதிபலிக்கிறது. மேலும், கைவினைப் பொருள் அங்காடி, உணவுக்கூடம், பசுமைப் பகுதியுடன் கூடிய சிறார் விளையாடுமிடம் ஆகியவையும், 128 சீருந்துகள் மற்றும் 340 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்தங்கள் மற்றும் 8 பேருந்து நிறுத்தங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment