Editorial News

இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டுக் கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

2009 மற்றும் 2019ஆம் ஆண்டுகளின் புள்ளி விவரங்களை ஒப்பிடும்போது, இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை விபத்துகளில் சிக்கி மரணம் அடைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

2020ஆம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்துக் கழக அறிக்கையின்படி, ஒரு மணி நேரத்திற்கு 6 இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதாகத் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தியிருக்க வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

Picture of two widowed penguins comforting each other wins top photography award

Penbugs

Donald Trump calls India’s air quality as filthy

Penbugs

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

Penbugs

வெளியான பும்ரா, சஞ்சனா திருமண புகைப்படங்கள்

Penbugs

The new “Sunriser”- Priyam Garg

Penbugs

போலீசாருக்கு பிறந்த நாளன்று விடுமுறை : சென்னை காவல்துறை ஆணையர் அசத்தல்

Penbugs

2021 தேர்தலில் ஆண்களை விட 5.7 லட்சம் பெண்கள் வாக்களித்தனர்

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு முடிவு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

Penbugs

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Nigeria new law: Surgical castration, death penalty for rapists

Penbugs

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

Penbugs

Leave a Comment