Editorial News

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை தமிழகம் வர உள்ளார்.

இதனை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நாளை (14.02.2021) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி, கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்ட திருப்பி விடப்படும்.

கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம் எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயம் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

சவுத்கொனல் ரோட்டில் இருந்து காந்தி சாலை நோக்கி வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம் என்று தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

திரையரங்குளில் 100% இருக்கையுடன் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி

Kesavan Madumathy

The captain’s go-to bowler-Neil Wagner

Penbugs

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

Penbugs

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

Penbugs

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Kesavan Madumathy

வெளியான பும்ரா, சஞ்சனா திருமண புகைப்படங்கள்

Penbugs

மார்ச் 31க்குள் பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்

Kesavan Madumathy

ECS T10 Brescia 2021- Full Teams Squad, Fixtures, Timings, Venue Details, and Live Streaming

Anjali Raga Jammy

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

Penbugs

Pakistan admits that Dawood Ibrahim is in Karachi

Penbugs

Orissa High Court orders state to give protection to a woman who wants to live with her same-sex partner

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

Leave a Comment