Editorial News

மதுரையில் தன் மகனுக்கு மெழுகுச்சிலை ; தந்தை உருக்கம்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் 6 அடிக்கு மெழுகு சிலை அமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த பாசக்கார தந்தை முருகேசன்.

முருகேசன் – சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு மகள்களுக்கு பிறகு, மூன்றாவது மகனாகப் பிறந்தவர் மாரிகணேஷ். அவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சிறு வயதில் புல்லட் பைக் ரேசராக இருந்த மாரிகணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிகணேஷ் 2019, நவம்பர் மாதம் 18 ஆம் தேதியில் உயிரிழந்தார்.

மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷ்க்கு தத்ரூபமாக மெழுகு சிலை செய்துள்ளார்.

மாரிகணேஷின் உருவ சிலையைக் காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Related posts

Bangalore Literature Festival to be held on December 12-13

Penbugs

35 கி.மீ தூரத்தை சில நிமிடங்களில் கடந்த மனித இதயம்..!

Penbugs

Joe Biden wins US Presidential elections

Penbugs

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

Kesavan Madumathy

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Penbugs

Video: Ilayaraaja wishes singer SP Balasubrahmanyam a speedy recovery

Penbugs

புதிய மாவட்டங்களின் சட்டபேரவை தொகுதிகள் அறிவிப்பு

Penbugs

அம்மா சிமெண்ட் விலை உயர்வு

Penbugs

Pakistan Police blames woman for gang rape, faces backlash

Penbugs

மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Penbugs

Man gives MP minister a hair cut on stage, awarded money to set up shop

Penbugs

Leave a Comment