உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் 6 அடிக்கு மெழுகு சிலை அமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த பாசக்கார தந்தை முருகேசன்.
முருகேசன் – சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு மகள்களுக்கு பிறகு, மூன்றாவது மகனாகப் பிறந்தவர் மாரிகணேஷ். அவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சிறு வயதில் புல்லட் பைக் ரேசராக இருந்த மாரிகணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிகணேஷ் 2019, நவம்பர் மாதம் 18 ஆம் தேதியில் உயிரிழந்தார்.
மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷ்க்கு தத்ரூபமாக மெழுகு சிலை செய்துள்ளார்.
மாரிகணேஷின் உருவ சிலையைக் காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தி வருகின்றனர்.