Coronavirus

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருவதால், ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. எனினும் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் தொடரும். மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடியே இருக்கும். 70 சதவீத பணியாளா்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். மெட்ரோ மற்றும் புகா் ரயில் சேவைகள் இயங்காது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலை மேம்படுத்த உதவிபுரிவது நமது கடமை. எனவே மாநிலத்தில் தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது என்று மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த பொது முடக்கம், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs

நகராட்சியில் கடைகளை திறக்க அனுமதி: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

How to register for COVID19 vaccine- Step by step guide

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்; பிரதமர் மோடி

Penbugs

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

Penbugs

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Pune man wears Gold Mask worth Rs 2.89 Lakhs

Penbugs

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs