Coronavirus

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருவதால், ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. எனினும் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் தொடரும். மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடியே இருக்கும். 70 சதவீத பணியாளா்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். மெட்ரோ மற்றும் புகா் ரயில் சேவைகள் இயங்காது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலை மேம்படுத்த உதவிபுரிவது நமது கடமை. எனவே மாநிலத்தில் தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது என்று மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த பொது முடக்கம், மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Overwhelming response for PM Modi’s 9 PM 9 minutes to eliminate COVID19 ‘darkness’

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

Kesavan Madumathy

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

IPL 2020: Members of Chennai Super Kings contingent, team test positive for COVID-19

Penbugs

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

COVID19: World Bank approves $1 Billion emergency fund for India

Penbugs

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

Payment of wages during lockdown not mandatory: Government withdraws clause

Penbugs