Coronavirus

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

நொய்டா பகுதிகளில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் பொது இடங்களுக்கு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா பரவல் குறித்து அறிந்து கொள்வதற்கு, கொரோனா பாதிக்கப்பட்ட நபர், நாம் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது. அந்த ஆப்பை அனைவரையும் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைல் போனில் ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் பொது இடங்களுக்கு மக்கள் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆரோக்ய சேது ஆப் இல்லாமல் இருப்பது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்கள் கட்டாயம் ஆரோக்ய சேது ஆப்பை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்துவைத்திருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, ஆரோக்ய சேது ஆப்பில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்

Related posts

I was pretty scared, much better than expected: Virat Kohli on 1st net session in Dubai

Penbugs

India likely to pull out of tri-series due to increasing COVID19 cases

Penbugs

தமிழகத்தில் இன்று 4515 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பாதிப்பு தமிழகத்தை விட்டு விலகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

Penbugs

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs

இன்று ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது

Kesavan Madumathy

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

IPL 2020: All 13 CSK members tested negative

Penbugs