மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பி., 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருப்பதை அந்த கடிதத்தில் ஜெகன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இசைத்துறைக்கு 50 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ள எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.



Women let rape happen, don’t blame only men: Bhagyaraj