Editorial News

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமுதா, தற்போது முசோரியில் உள்ள தேசிய நிர்வாக அகாடமியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் கலைஞர் நல்லடக்க நிகழ்வை அரசு சார்பாக ஒருங்கிணைத்தவர் அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் திமுக , அதிமுக என இரண்டு ஆட்சிகளிலும் திறம்பட பணிபுரிந்தவர்.

Related posts

TN Govt school students to be taught via TV

Penbugs

தெலங்கானா மருத்துவர்களுக்கு ஊக்கமளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

Kesavan Madumathy

Whole India lockdown for 3 weeks: PM Modi addresses nation

Penbugs

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Penbugs

Congress President Sonia Gandhi admitted to Delhi hospital

Penbugs

இனி எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்!

Penbugs

Jamia protestors have bullet wounds says doctor; cops deny firing

Penbugs

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு …!

Penbugs

Bhagyaraj to play a role in Chithi 2

Penbugs

VIL offers a unified Vodafone RED experience to all postpaid customers

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

Leave a Comment