ரயில்நிலைய கவுண்டர்களில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து இருந்தார்.
மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படாது எனவும், பயணிகள் யாரும் டிக்கெட் எடுப்பதற்காக ரயில் நிலையங்களுக்கு வரவேண்டாம் எனவும் அமைச்சர் கூறி இருந்தார். மேலும் ரயில் பயணங்களுக்கான முன்பதிவு நேற்று (21 ம் தேதி) முதல் துவங்கப்பட்டது.
இதனிடையே ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரயில்நிலைய கவுண்டர்களில் இன்று (22ம் தேதி ) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்து உள்ளது.

Toxic environment: The Ellen Show is under investigation