தமிழகத்தில் புதிதாக 1,385 பேருக்கு கொரோனாரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,68,367 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 659 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,47,139 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று 10 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,609 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மொத்தமாக 73,207 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.