தமிழகத்தில் இன்று புதிதாக 1,779 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 8,73,219ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 664, செங்கல்பட்டில் 162, கோவையில் 153, தஞ்சையில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,641ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
