வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக அணியின் இந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.
இதேபோன்று வரும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனா பாதிப்பினால், இந்த தொடரை ஒத்தி வைப்பது என முடிவாகி உள்ளது.
இதுபற்றி வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி கூறும்பொழுது, கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள இந்த சூழ்நிலையில், வரும் ஆகஸ்டில் கிரிக்கெட் தொடருக்கு தயாராகி போட்டியை நடத்துவது என்பது சவாலானது. வீரர்கள், துணைநிலை ஊழியர்கள் மற்றும் அணி சார்ந்த நபர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த சூழலில், வங்காளதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை போட்டி தொடரை ஒத்தி வைப்பது சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்

Bangabandu T20 cup | Match 17 | BDH vs GKH | Dream 11 Prediction | Fantasy Cricket Tips