Coronavirus

கொரோனா நோய்த் தொற்று உறுதி ; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற, இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி என்றாலே ‘இருட்டுக்கடை அல்வா’ என்று தனித்துவமான, தனகென்று தனி ’பிராண்ட்’ பெயரை உருவாக்கியவர் ஹரிசிங். திருநெல்வேலிக்குச் சென்றவர்கள் யாரும் அல்வா வாங்காமல் வெறும் கையோடு திரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் தனது இருட்டுக்கடை அல்வாவுக்கு நற்பெயரைப் பெற்றிருந்தார் ஹரி சிங். இந்த நிலையில் கொரொனா பாதிக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல், சளி ஆகியவற்றால் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹரி சிங். இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த தகவல் அனைவர் மத்தியிலும் சோகத்தையும் ,அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Penbugs

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

Jodhpur cop kneels on man’s neck for not wearing mask

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

COVID19 in Chennai: Wine shops to stay closed

Penbugs

RBI Governer conference: Repo rate cut by 75 bps to 4.4%, CRR by 100 bps to 3%

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

Shoaib Malik to meet Sania Mirza and their son after 5 months

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs