Penbugs
Editorial News

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

சென்னையில் தற்போது 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம், பாரிமுனை வழியாக வண்ணாரப்பேட்டை வரையிலும், அதேபோன்று வண்ணாரப்பேட்டையிலிருந்து பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 9.05 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ரயில் நிலையங்கள் (வண்ணாரப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே 8 மெட்ரோ நிலையங்களுடன் 2 நிலத்தடி மற்றும் 6 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டத்தின்போது, டீசல் லோகோமோடிவ் வாகனம் அதன் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. சோதனையின்போது மொத்தம் 9.05 கி.மீ. அப்லைன் மற்றும் டவுன்லைன் இரண்டிலும் இயக்கவும் வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரையிலான முழு கட்ட முதல் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது என‌ மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

மெட்ரோ ரயில் சேவை – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது – நிதின் கட்காரி

Penbugs

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

Penbugs

Leave a Comment