Coronavirus

ஊரடங்கு காலத்தில் 1,150 டன் மருத்துவப் பொருள்களை கொண்டு சென்ற ரயில்வே

தேசிய ஊடரங்கு அமலாக்கப்பட்ட காலகட்டத்தில் நாடு முழுவதும் 1,150 டன் மருத்துவப் பொருள்கள் பாா்சல் ரயில்களின் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மருந்துகள், முகக்கவசம், மருத்துவமனை உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்கள் அடங்கும்.

இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக கால அட்டவணைப்படி நாடு முழுவதும் ரயில்கள் மூலம் பாா்சல்களில் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் வடக்கு ரயில்வே சுமாா் 400 டன் பொருள்களை கொண்டு சென்றது.

மேற்கு ரயில்வே 328.84 டன், மத்திய ரயில்வே 136 டன் எடையுள்ள பொருள்களையும் கொண்டு சென்றது.

நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதில் ரயில்வே குறிப்பிடத்தக்க பங்காற்றி வரும் நிலையில், தேவைப்படும்போது மருத்துவப் பொருள்களையும் கொண்டு சென்று மக்களுக்கு உதவி புரிந்து வருகிறது.

அண்மையில், அஜ்மீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிறுவனுக்காக ஆமதாபாதில் இருந்த அஜ்மீருக்கு ரயில் மூலமாக மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், ஆமதாபாதில் இருந்து ரத்லாம் பகுதியில் அறுவை சிகிச்சை முடிந்த இளைஞருக்காக ரயில் மூலம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல, அஜ்மீரில் கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு மருந்துகள் தீா்ந்துவிட்டதால், அவரது உறவினா்கள் ரயில்வே அதிகாரிகளை அணுகி, ஆமதாபாதில் இருந்து அஜ்மீருக்கு ரயில் மூலம் மருந்துகளை அனுப்பி வைத்தனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

“I was almost on the verge of giving up and taking a retirement”: Mithali Raj

Penbugs

Norway PM fined by Police over COVID violations

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

கொரோனா: அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,508 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

Penbugs